Pages

Monday 27 February 2012

மின்வெட்டு

பண்பலையில் ராஜாவின் பாடல்கள்
நட்சத்திரப்புள்ளிகளில் இணைக்கும் ஓவியங்கள்
தலைக்கோதி மகனுக்கு கதைசொல்லல்
மொட்டைமாடி மென் நடை
கணினி அரட்டையில் மூழ்கிப்போகாத இரவு
புத்தக வாசனை நிறைந்த உறக்கம்
அலாரம் வைக்காமலே அதிகாலை விழிப்பு
மீட்டெடுத்த ரசனைகள்
அனைத்தும் காணாமல் போகின்றன
காலை அவசரத்தில் ஓடாத மிக்ஸியும்..
தண்ணீர் வராத குழாயும்..வேலை செய்யாத லிப்ட்டும்..
ஒரே நேரத்தில் நன்றி நவிலலும்,
வசைப்பொழிதலும் மின்வெட்டிற்கு..



2 comments: