Pages

Tuesday 21 February 2012

பெரும்பான்மையான குற்றச்சாட்டு நம்மில் பலர் படித்து முடித்ததும் வெளி நாட்டினை நோக்கி சென்று விடுவதால் தான் இந்தியா இந்த நிலைமையில் இருக்கிறது என்பதுதான்.. இதை கேட்கையில் இது முற்றிலும் உண்மை தான் என்பது போல் தான் நமக்கு தோன்றும்..ஆனால் அங்கு வேலைக்காக சென்றிருக்கும் ஒரு தோழியின் மனக்குமுறலை கேட்டபின் அதற்கு பதில் சொல்ல என்னால் முடியவில்லை..

தோழியின் வார்த்தைகள்.:-

சமீபத்தில் தளம் ஒன்றில், எங்களை (வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களை) கண்டால் வெட்கமாகவும், வேதனையாகவும் இருப்பதாக தோழர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். அதோடல்லாது நாங்கள் பகட்டிற்காக அந்நியதேசத்தில் கையேந்தி நிற்க்கிறோமாம்...மேலும் திறமை படைத்தவர்கள்( அப்போ நீங்க எல்லாம் என்ன முட்டாள்களா ???)எல்லாம் அயல் நாடு போய்விட்டதால் இந்தியா இன்று இந்நிலையில் உள்ளதாம்.

எனக்கு எப்போதும் ஒன்று மட்டும் புரிவதில்லை, என் நாடு, என் நாடு என தொண்டை கிழிய கத்தி எங்களை குற்றம் சாட்டும் நாட்டுபற்றுகளே..இன்றைய இந்தியாவின் நிலை உங்களால் தன் என நான் சொல்வேன்.

என் வீட்டில் எதுவும் கோளாறு என்றால், நான் வாடகைக்கு அமர்த்தி இருக்கும், என் வீட்டில் வசிக்கும் நபரையே கேள்வி கேட்பேன். அப்படி இருக்கும் போது சொந்த மண்ணில் வசித்து அதை இந்நிலைமைக்கு கொண்டு வந்த நீங்கள் குற்றவாளிகளா இல்லை அயல் நாட்டில் வசிக்கும் நாங்களா??? அயல் நாட்டில் எங்களது திறமைக்கு அங்கிகாரம் இருக்கிறது, எங்களால் சொந்த மண்ணில் குறைந்தது இரண்டு வீட்டிலாவது அடுப்பெரிகிறது, தானமும், தர்மமும் முடிஞ்சவரை செய்கின்றோம். இங்கே அந்நிய தேச மோகத்திற்காக மட்டும்  நாங்கள் வரவில்லை.

என்னை குற்றம் சாட்டுபவரிடம் நான் எப்போதும் கேட்பது இது ஒன்றை தான். இத்தனை பேசும் நீங்கள் நாடு முன்னேற என்ன கிழித்தீர்கள்??? நாட்டை விடுங்கள், மாநிலம் இல்லை குறைந்தபட்சம் மாவட்டம், அவ்வளவு ஏன் உங்கள் ஊர் அல்லது தெரு மட்டுமேனும் ஏதாவது உபயோகமாக செய்து இருக்கிறீர்களா ???


ஆம் எனில், நானும் உங்களுடன் கைகோர்க்க தயார்..லட்சங்கள் வேண்டாம், உங்கள் லட்சியமே முக்கியம் என இந்நாட்டை துச்சமாக தூக்கி எரிந்து விட்டு வர நான் தயார்..கூறுங்கள் தோழர்களே.......

No comments:

Post a Comment