ஒற்றை சொல்
வேரறுத்து விடுகிறது
சுலபமாய்
நமக்கான நட்பை..
முகம் மறைத்து வழிப்பிரிந்து
செல்கையில் தான்
இதயம் நிறைக்கிறது
உன் நினைவுகள்.
காட்சிகள் கோர்த்து கொண்டே
விரிகையில் சிறகொடிந்த
பறவையாய் வீழ்கிறேன்..
என் கர்வத்தின் முன்..
இருந்தும் ...
முற்றுப்புள்ளியாய்
உன் கடைசி வார்த்தை..
No comments:
Post a Comment