Pages

Wednesday 8 February 2012

ஹைக்கூ

ஹைக்கூ

மூன்று வரிகளில் முழுமையாக சொல்ல வந்ததை சொல்வது. இருபதாம் நூற்றாண்டின்  ஆரம்பத்தில் இந்தியாவிற்கு அறிமுகமான கவிதை நடை இது. நாமெல்லாம் பெருமை பட்டு கொள்ளலாம் நம் பாட்டன் பாரதி தமிழுக்கு அறிமுகபடுத்தினார் தன் சுதேசமித்திரனில் என்று. 

சில பொதுவான விதிகள் 
  • ஒரு ஒற்றை வரியில் பதினேழு வார்த்தைகள் அல்லது மூன்று வரிகளில், அல்லது மூன்று வரிசைகளில் 5-7-5. 
  • இரண்டாவது வரிசையில் நீண்டு ஆனால் பதினேழு எண்ணிக்கையிலில்லாமல் 
  • ஒன்றின் கீழ் ஒன்றாக
  • ஒரே மூச்சில் படித்துவிடகூடிய
  • மூன்று வரிகளையும் வாசிக்கும்போது ஒரே வாக்கியமாக இல்லாமல் 
  • இரண்டாவது அல்லது மூன்றாம் வரிகளில் ஒரு இடைநிறுத்தம் கொண்டு 
  • எப்போதும் நிகழ்காலத்தில் 
  • உருவகபடுத்தாமல்
  • தெளிவாக விளங்கும்படி ஜென் கதைகளை போல் படித்ததும் புரிந்துவிடகூடிய 
  • எதுகை , மோனை பயன்படுத்தாமல்

சில எடுத்துகாட்டுக்கள் 

மூலைகள் வெட்டப்பட்டன 
காகித கப்பல் 
நான் மீண்டும் மிதக்க - (முதல் தமிழ் ஹைக்கூ - வெங்கட்ரமணி )

கண்ணாடியை துடைக்க துடைக்க 
என் முகத்தின் அழுக்கு 
தெளிவாகிறது 

பிம்பங்களற்ற  தனிமையில் 
ஒன்றையொன்று முகம்பார்த்தன
சலூன் கண்ணாடிகள் - நா . முத்துக்குமார்      

மீன் துள்ளுகிறது 
ஜலத்தில் 
சலசலக்கும் மேகங்கள் 

காரில் அடிபட்டு நசித்த பின்
நாயின்  வால் மட்டும் 
அசைகிறது 
-சுஜாதா 

ஒரு பெரிய வெறுமை 
வெட்கமில்லாத
 வானம் 

வகுப்பறை 
ஒரு குழந்தை கவனிக்கிறது பரவசத்துடன் 
ஜன்னலில் மேகம்

ஒரு நீண்ட பேச்சு 
நிறுத்தப்பட்டது 
ரயில் 
- அமுத பாரதி


முகம் பார்க்கும் நிலவை
முத்தமிட்டு உடைக்கும்
கரையோர தவளைகள்

பச்சை நாற்றுகளின்
பனித்துளி கண்ணாடிகளில்
வியர்வை பிம்பங்கள்


மழையில் நனையும்
ஓட்டை குடைகள்
மரங்கள்


தோல் தொழிற்சாலை-
நிலவு மூச்சு கஷ்டப்படுகிறது
கழிவு நீர்

-அறிவுமதி

குளம்
கொக்குகள் எங்கே பறந்தன -
விசில் ஒலி

(திருச்சி கவித்துவன் )

இருண்ட கிராமங்கள் வழியாக
இதயமற்ற நகரங்களுக்கு செல்லவும்
மின்சார கேபிள்கள் - முருகன்

உடைக்கும் வரை
உயிரோடிருந்தது
குழந்தையின் மான் பொம்மை

இருட்டில் அமர்ந்து
மௌனத்தை தின்னும்
அணைந்த மெழுகுவத்தி

(மு.முருகேஷ் )

பௌர்ணமி
வீடுகள் இழந்த
நண்டுகள்

பிணத்தின் மீது மாலை
தேனுக்கு வரும்
வீட்டு எறும்புகள்

 இரவு நேரம் தாலாட்டும் மின்விசிறி
எட்டிப்பார்க்கும்
 நிலா 
- மித்ரா

(நன்றி a. தியாகராஜன் ) 

இந்த கவிதைகள்  எல்லாமே விதிகளுக்கு உட்பட்டுதான் எழுதபட்டிருக்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் நம் மரபுக்கவிதைகளிலும் , புதுக்கவிதைகளிலும் சொல்லப்பட்டிருக்கும் இலக்கணம் மீறிய நடையில் அமைந்துள்ளன இக்கவிதைகள். சுஜாதா , அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் நிறைய எழுத்தாளர்களை ஹைக்கூ நடையில் எழுத ஊக்குவித்தார்கள் எனலாம் . ஆனால் சில கவிஞர்கள் அத்தனை விதிகளிலும் கவனம் கொண்டு ஹைகூவினை எழுத முடியாது என கூறியிருக்கிறார்கள். விதிகளை மீறி புது இலகனங்களை கொண்டு உருவான பல புதிய நடைகளை நாம் ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். புதுமைகளை வரவேற்போம்.  

No comments:

Post a Comment