விளக்கம் சொல்லவியலா
தருணங்கள் கோபங்களாகவோ
எரிச்சல்களாகவோ
வெளிப்பட்டு விடுகின்றன..
அர்த்தமில்லா வசவுகளோ
வலிக்க கூடிய அடிகளோ
எப்பொழுதும்
உன்னால் மறந்து விடப்படுகின்றன
நினைத்துப்பார்க்கையில்
ஒவ்வொன்றும்
பிடுங்கவியலா ஆணிகளாக என்
மனதின் ஆழத்தில்.
கன்னமிழைத்து சிரிப்பதிலோ
மடியில் வந்து விழுகையிலோ
கள்ளமில்லாமல் சிந்திவிடுகிறாய்
உன் பாசங்களை.
வெறுமை பூசிய
முத்தத்துடன்,அழுகை
வெளிப்படுத்தும் சிரிப்புமாக
உலவிக்கொண்டிருக்கிறேன் நான்.
முதிர்ந்து விட்ட தாயாக நீயும்
அடைப்புக்குறிக்குள் அடங்கிவிட்ட
சேயாக எப்பொழுதுமே நான்.
தருணங்கள் கோபங்களாகவோ
எரிச்சல்களாகவோ
வெளிப்பட்டு விடுகின்றன..
அர்த்தமில்லா வசவுகளோ
வலிக்க கூடிய அடிகளோ
எப்பொழுதும்
உன்னால் மறந்து விடப்படுகின்றன
நினைத்துப்பார்க்கையில்
ஒவ்வொன்றும்
பிடுங்கவியலா ஆணிகளாக என்
மனதின் ஆழத்தில்.
கன்னமிழைத்து சிரிப்பதிலோ
மடியில் வந்து விழுகையிலோ
கள்ளமில்லாமல் சிந்திவிடுகிறாய்
உன் பாசங்களை.
வெறுமை பூசிய
முத்தத்துடன்,அழுகை
வெளிப்படுத்தும் சிரிப்புமாக
உலவிக்கொண்டிருக்கிறேன் நான்.
முதிர்ந்து விட்ட தாயாக நீயும்
அடைப்புக்குறிக்குள் அடங்கிவிட்ட
சேயாக எப்பொழுதுமே நான்.
நற்றிணையில் வெளியான கவிதை..