Pages

Friday 24 February 2012


சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் வழியெங்கிலும் மரங்கள் கவிந்து இயற்கை அளித்த நிழற்குடையாய் சில்லென்று இருக்கும்.அடி மரத்தினைப்பார்க்கையில் பழமையான மரங்கள் என தோன்றும்.. (சிறு வயதில் மரங்களின் வயதைப்பற்றி தெரியாததால் மரம் பெரியதாக இருந்தால் அது வயதான மரம் என்பது என் அனுமானம்.).செங்கல்பட்டு தாண்டும் வரை என்று நினைக்கிறேன். பசுமைக்கு குறைவில்லாமல் அந்த சாலை முழுதும் வயல்களும், மரங்களும் நிறைந்திருக்கும். நகர வாழ்க்கையினை விரும்பி புலம்பெயர ஆரம்பித்த மக்கள் வசதிக்காய் சாலையை அகலப்படுத்த வேண்டி அந்த மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு இப்போது தகிக்கும் வெயில்தான் அந்த சாலையெங்கிலும்.. சமீபமாக திருச்சி - ராமேஸ்வரம் செல்கையிலும், முசிறி செல்லும் வழியிலும் பல ஆண்டுகளாய் இருந்த மரங்கள் அடியோடு சாய்க்கப்பட்டிருந்தன.. அதற்கு பிரதிபலனாய் எங்குமே சிறு செடிகள் கூட நடப்படவில்லை.. ஒரு சகோதரனிடம் நான் இது பற்றி அங்கலாய்க்கையில், மக்களின் சொகுசான வாழ்க்கைக்கான பலியிடுதல் இது, இதற்கு மீண்டும் மரங்கள் நட்டால் தீர்வாகாது என்று கூறினார்.. இங்கு சில நாட்களுக்கு முன்னரும் ஒர் நிலைத்தகவல் பதிந்திருந்தனர், மீண்டும் மரங்கள் நட்டால் ஏற்கனவே நட்ட மரங்களை வெட்டியதற்கு சமமாகி விடுமா என்று. இதே போல் நம் முன்னோர்கள் நினைத்திருந்தால் நாம் சிறு வயதில் அனுபவித்த அந்த இயற்கை சூழல் நமக்கு கிடைத்திருக்குமா என்று தோன்றியது, அதே சமயம் சகோதரர் சொல்லியதும் சரிதான், இப்போது நாம் நடப்போகும் மரங்கள் நாளை நம் பிள்ளைகளின் வசதிக்காக அழிக்கப்படுமென்று.. விடை சொல்பவர் யார்.... இல்லை மாத்தாய் போல் கடமையை செய்து கேள்வியில்லாமல் சென்று விடலாமா??


No comments:

Post a Comment