Pages

Wednesday 4 January 2012

எந்த சந்தோஷமுமற்ற ,எந்த வேதனையுமற்ற ஏகாந்தம் இனிது.. இனிது. இனிது.. சில நொடிகள் , சில நிமிடங்கள் நம் வாழ்க்கையில் கைவரப்பெற்றிருக்கும் இந்த ஏகாந்தம் அனுபவித்தறிந்தவர்களுக்கு இனிதே தான்..



******************************************************************


தனக்கே தனக்கான எதிர்காலம் மற்றவர்களை நம்பி இருப்பதாக நினைப்பதில் தொடங்குகிறது முதல் ஏமாற்றம்.


*************************************************



சில தவறுகளுக்கான விளக்கங்கள் சொல்லப்படாமலிருப்பதே பல வன்மங்கள் உருவாகாமல் இருக்க வழி.


**************************************************



உன் நினைவுகளற்ற என் கனவுகளின் ஒரு மூலையில் கூட நானில்லை...


**************************************************



வளையாத மூங்கில்கள் தனித்தே நிற்க வேண்டியிருக்கிறது.


*************************************************





சில நேரங்களில் இறுகக்கோர்த்தும் விரலிடுக்குகளில் நழுவி விடுகிறது பிரியம்..


**************************************************





மனதின் அடி ஆழ வெறுப்புக்கள் தன் முழு வன்மத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஏதோ ஒரு வார்த்தையினை நோக்கி காத்திருக்கிறது.


**************************************************



மிதந்தலையும் காற்றினை குறுக்கியிழுத்து இசையும்
குழலிசைப்போல் உன் நினைவினை நிறுத்தி
சுவாசிக்கும் சுவாசமே முழுமை பெறுகிறது...


**********************************************



ப்ரக்ஞையற்று சுற்றித்திரிகிறது காற்று
சூல் கொண்ட மேகங்களை கலைத்துவிட்டு


*****************************************





"நாட்கணக்கில்
மறைத்திருந்த உன் சுயம்
வெளிப்பட்ட கணம்
நீ நீயாகவும்
நான் நானாகவும்."

*****************************************





"
ஒவ்வொரு கவிதை
புனைதலிலும்
நேர்ந்து விடுகிறது
அடித்தல்
திருத்துதல்கள்.


கவிதையாக
இருப்பதினால் வலிகளை
வார்த்தைகளில்
அடக்கிகொண்டு விடுகிறது .."

*****************************************







"இருத்தலுக்கும் இல்லாதிருத்தலுக்கும்
இடையில் நீ..."

*****************************************





"விலகிவிடுதலுக்கான
பிரயத்தனங்களாய் மௌனங்களை
மென்று கொண்டிருக்கிறேன்.."

****************************************





"இடம் வலமென
மழை சுழன்றாடிய பின்
ஏதுமற்றதாய் இருக்கிறது வானம்."

*****************************************





"துயரங்களை தோள் மாற்ற முயல்கையில் அவை நழுவி செல்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.."

****************************************





"காரணமற்ற
உன் அழுகைகளினால்
வரும் கோபங்கள்
உன் காகிதகப்பல்கள்
மூழ்கிவிடாதிருக்க
பதைப்பதைப்பதில்
காணாமல் போய்விடுகின்றன."


***********************************







"ஒரே ஒரு கணத்தில் மாறக்கூடியவை தான் எல்லாம்..அந்த கணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது."


************************************







"அவரவர் செய்கையில் அவரவருக்கான நியாயம் இருக்கத்தான் செய்கிறது..மறுக்க முடியாதபடி.."

************************************






























No comments:

Post a Comment