Pages

Saturday, 15 September 2012


முதல் துளி வீழ்ந்த கணம்
மண்வாசனையை பற்றிவந்ததாய் ஞாபகம்
விலக்கப்படாத ஒரு நினைவு
உள்ளுக்கும் வெளிக்குமாய்
கடந்து செல்கின்றது.

இழுத்துப்பிடித்த சுவாசங்களும்
உடல் நிறைத்த மழைத்துளிகளுமாய்
நீட்டித்துக்கொண்டிருக்கிறேன் உனக்கான
என் வாழ்வை.

இருந்தும்
தொடுதலற்ற உன்னுடனான பொழுதுகள்
ஏகாந்தத்தை நீட்டித்தது போல் இந்த
மழை இல்லவே இல்லை.

No comments:

Post a Comment