Pages

Saturday 8 September 2012


உனக்கென்று ஒரு கணம்

ஒரு கணத்தின் மகத்தான
வரத்தினை உனக்கு
அளித்திடக் காத்திருக்கிறேன்
நெடு நாளாய் நீ காத்திருந்த
நொடி இதுவாகத்தான் இருக்க கூடுமென
தெரிந்திருந்தும் பொத்தி வைத்திருந்ததற்காய்
நீ கோபித்து கொள்ளவும் கூடும்
இக்கணத்தினை உனக்கு பரிசாய்
அளித்திட்டால் பல கணங்களாய்
அமிழ்த்தியிருந்த உன் வேட்கைகள்
ஒருசேர என்னை தாக்கவும் கூடும்
தொடர் தகிப்புக்களை
என்னால் தாங்கவியலாது என
மிக மென்மையான காதல்களை
எனக்கு நீ பரிசளிக்கவும் கூடும்
விருப்பு வெறுப்பற்ற
தோழனாயும் நீ என் எதிர்ப்பார்ப்புக்களை
கேலிப்பேசி விடவும் கூடும்
கருணையற்ற மழையைப்போல்
நீ ஒரேயடியாய் என்னை
முகிழ்த்துவிடவும் கூடும்
இவையெல்லாவற்றையும்
நான் தாங்கிவிடவும் கூடும்
இல்லையென்றால்
உன்னிடமிருந்து கூட எனக்கான
அழைப்பு வரக் கூடும்
காலம் மட்டுமே அறிந்த நிகழ்வுக்காய்
உன் திசை நோக்கி நகர்த்துகிறேன்
என் மொத்த பிரியத்தையும்.

அதீதத்தில் வெளியான கவிதை..

No comments:

Post a Comment