ப்ரியத்தோழி
Pages
Friday, 26 August 2011
நீயே நானாக
விரல் பிடித்து
நடக்கையில்
உன் நரம்புகளின்
ரத்த அதிர்வுகளில்
கூட என் இதய
துடிப்பினை உணர்கிறேன்....
கனவுகளின் கலைதல்கள்
பெரும்பாலும்
உன் நெஞ்சின்
கதகதப்பிலே
கழியும்...
நீயில்லாத நாட்களின்
நீட்சியை குறைக்க
நீயே நானாக
நிறைந்து நிம்மதி கொள்கிறேன்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment