கொலுசு சத்தம்
தாளம் தவறாமல்
தடதடத்து தாலாட்டி
தண்டவாள பாதையில்
இடறி விடாமல்
இழுத்து போவாய்
உன் பெட்டிப் பிள்ளைகளை..
காட்சிகள்
கண்ணாமூச்சிக் காமிக்கும்
உன்னில் பயணிக்கையில்
தென்றலுடன்
சில சமயம்
கதைப்பேசிக் கொள்வேன்
உன் தாளத்துக்காண
வார்த்தைகள்
தேடி திரிவதிலேயே
பயணம் முடிந்துவிடும்...
தூக்கம் கலைந்த
கடுப்புடன் மேல்
விழுந்து ஓடும்
சில மனித இயந்திரங்களை
நொந்துக்கொண்டு
தாய் மடி சுகத்தினை
என்னைப்போல் ஒருவனுக்காய்
விட்டுக்கொடுத்து விடைபெறுகிறேன் நான்...
nice!!!
ReplyDelete