Pages

Friday 19 August 2011

கனவு








நெடுநாளாய் எனக்கு

ஒரு கனவு வரும்

ஒரு பாதையின் எதிர்பாரா

திருப்பத்தில் ஒரு தேவதை

பூங்கொத்தை வைத்துக்கொண்டிருப்பது போல்..




வழக்கமாய் போய்விட்டதால்

பெரிதாய் எடுத்து கொள்வதில்லை..

நேற்று உன்னை பார்த்த பின்

தான் தெரிந்தது வந்தது ஒரு

காதல் தேவதை என்று...




உலகில் படைக்கப்பட்ட

காதலை எல்லாம்

உன் கையில் கொடுத்தனுப்ப

காத்திருந்தது என்று...




ஒரு பூவையேனும்

என்னிடம் கொடுத்திருக்கலாம்

என் கனவின் வழியே உன்னை

சந்திக்க தெரிந்த தேவதைக்கு

என்னை சந்திக்க

மனமில்லாமல் போனதற்க்கு

காரணம் என்னவாயிருக்கும்..




காத்திருக்கிறேன் கனவு காண

தயவு செய்து என்னை

தொந்தரவு செய்யாதே

கனவில் என் காதலா.....

No comments:

Post a Comment