Pages

Saturday 24 March 2012


நம்முடன் ஒத்துப்போகும் ரசனைகளை வைத்து மதிப்பிடப்படும் ஒருவர் உண்மையில் ரசனை இல்லாதவராக இருக்க முடியாது. இரவு வான் ஒருவருக்கு நட்சத்திரங்களை ரசிக்க தரலாம், மற்றொருவருக்கு நிலவற்ற இருளை ரசிக்க தரலாம், அதற்காக அவர் ரசனையற்றவர் என ஒதுக்க முடியாது. பொதுவாக ஒரு பிரபலத்திற்கோ அல்லது நாம் பெரிதும் மதிக்கும் ஒருவருக்கு பிடித்த ரசனைகளே நமக்கும் ரசித்து பார்க்கலாம் என தோன்றுகிறது, அதிசயமாய் நாம் ரசிக்கும் ஒரு சிறு விஷயத்தை வெளி சொல்வதற்கு கூட நாம் தயங்குகிறோம் என்பதே உண்மை.பலர் சொல்லும் ரசிப்புக்களையே நாமும் நமக்கானது என்று நினைத்துக்கொண்டு உங்கள் கூட்டத்தில் நானுமிருக்கிறேன் என்று மட்டுமே சொல்ல ஆசைப்படுகிறோம். வெளிசொல்லாதவரை அந்த வட்டத்தில் இருந்து தள்ளிவைக்கவே விரும்புகிறோம். ஒவ்வொருவரும் எத்தனை வேலைகளுக்குமிடையிலும் ஏதேனும் ஒரு விஷயத்தை கண்டிப்பாக ரசித்திருப்பார்கள், ஆனால் அந்த கணமே மறந்துமிருப்பார்கள்.ரசனைகளை மனதில் வைத்து அந்த கணத்தை மீண்டும் மீண்டும் ரசிப்பவன் கவிஞனாகிறான்.மற்றவன் ரசிகனாகிறான். ரசனைகள் மாறினாலும் ரசிப்பவர் இருக்கும்வரை உலகிலுள்ள அனைத்தும் அழகுதான்.அனைத்தும் ரசனைகள் தான்..

No comments:

Post a Comment