Pages

Saturday 24 March 2012

விதைக்குள் விருட்சம்


கல்லெறியும் விசையில்
கலைந்துவிடும் குளத்தின்
தெளிவு போல்
சிதறிப்போகிறேன்
உன் வார்த்தைப்பிரயோகங்களின்
முன்..

கூழாங்கற்கள் சேகரிக்கும்
சிறுமியின் பொறுமையில்
நீ சிதறவிட்ட
ஒவ்வொரு தருணங்களையும்
சேகரித்து வைத்துக்கொள்கிறேன்
காலத்தின் இடைவெளிகளில்..

மகரந்தகளோடு ரகசியம்
பரிமாறிக்கொள்ளும் தேன்சிட்டின்
மொழிகளை உன்
விரல்களுக்கு கற்பிக்கிறேன்

நிலம் கீறி
மேலெழும் சிறுவிதை
ஒளித்திருக்கும் விருட்சம்போல்
உன் மௌனங்கள் தேக்கிவைத்திருக்கும்
பெருங்காதலை
வெளியிட…
http://www.atheetham.com/atheetham/?p=176



No comments:

Post a Comment