Pages

Sunday 4 March 2012

திண்ணையில் வெளியாகியிருக்கும் என் கவிதையினை இன்று தான் பார்க்க நேர்ந்தது.. தொடர்ந்து கிடைக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது ..




உச்சி வெயிலில்
வெற்றுடம்புடன்
மருள் பார்வையில்
மயங்கி புடவையின்
நுனி பற்றி இழுத்தும்
கவனம் கார் கண்ணாடியிலும்
சிக்னல் விளக்கிலும் …
கைசேர்த்த காசுகள்
ஒரு பாலாடை பாலுடன்
சிறிது மதுவும் ஊற்றி
மயக்கத்தை உறுதிபடுத்தி
வாகன ஊர்வலத்தில்
இடைசெருகி
மாலை நேர
கணக்கு முடித்து
கமிஷன் வாங்கி
சேயை அதன் தாயிடம்
சேர்க்கையில் கண்ணில்
நிழலாடியது தன்னை
விற்றுப்போன
தாயின் முகம் …..
- இக்கவிதை கவிப்ரியா பானு என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.. ஆகஸ்ட் மாத இதழில்.. 

No comments:

Post a Comment