கல்லெறியும் விசையில்
கலைந்துவிடும் குளத்தின்
தெளிவு போல்
சிதறிப்போகிறேன்
உன் வார்த்தைப்பிரயோகங்களின்
முன்..
கூழாங்கற்கள் சேகரிக்கும்
சிறுமியின் பொறுமையில்
நீ சிதறவிட்ட
ஒவ்வொரு தருணங்களையும்
சேகரித்து வைத்துக்கொள்கிறேன்
காலத்தின் இடைவெளிகளில்..
மகரந்தகளோடு ரகசியம்
பரிமாறிக்கொள்ளும் தேன்சிட்டின்
மொழிகளை உன்
விரல்களுக்கு கற்பிக்கிறேன்
நிலம் கீறி
மேலெழும் சிறுவிதை
ஒளித்திருக்கும் விருட்சம்போல்
உன் மௌனங்கள் தேக்கிவைத்திருக்கும்
பெருங்காதலை
வெளியிட…
http://www.atheetham.com/atheetham/?p=176
