Pages

Saturday 30 July 2011

நீயே நானாக

நிரப்பி கொள்கிறேன் 
ரத்த நாளங்களுக்குள் 
பிரபஞ்சம் முழுதுமாய் 
நீ வியாபித்திருக்க ....
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜீவித்திருப்பதும்
மரணித்திருப்பதும் 
தொடர்ச்சியாய்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன
நீ வந்து செல்வதால் ....
~~~~~~~~~~~~~~~~~~~~~~

இமைகள் துடிப்பதும் 
இதயம் துடிப்பதும் 
இடைஞ்சலாய் - 
கனவுக்குள் நீ .....

~~~~~~~~~~~~~~~~~~~~~~

உனக்கு பிடித்த பாடல் 
ஒலிக்கையில் 
உன்னை மறக்கிறேன் 
நீயே நானாகிறேன் .....

No comments:

Post a Comment