Pages

Wednesday, 20 July 2011

மனித வாழ்க்கை

விட்டில் பூச்சியாய்
தினம் தினம்
விழுந்தும் வீழ்ந்தும்
எழுகிறோம்

பீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழ ஆசைபட்டாலும்
முயற்சியை
புதைத்தழிக்கிறோம்

உணர்ச்சிக்குவியலாய்
உடலை உணர்ந்தாலும்
உறைந்த உள்ளத்தால்
உரைக்க மறக்கிறோம்

இயந்திர வாழ்க்கையில்
இயல்புகளை மறைத்து
எதையோ தேடி
அலைகிறோம்

நிம்மதி விற்று
கவலை வாங்கி
மடி நிறைக்கிறோம்

ஐந்தறிவு விலங்கும்
அழகாய் வாழ்ந்து
போகிறது விதிக்கப்பட்டவரை

விதியை நொந்து
இருக்கும் வாழ்க்கை
தொலைத்து புலம்பும்
மனிதா வா .............




நம்பிக்கை எனும்
அச்சாணி கொண்டு
வாழ்க்கை நிலம் உழுது
மனிதம் பயிரிட்டு
உலகம் காப்போம்

No comments:

Post a Comment