Pages

Friday, 15 June 2012



அதீதத்தில்......






இறுக்கி கோர்த்துக்கொள்ளும்
கரங்களுக்கிடையில்
நேசங்களை புதைத்து
வைத்துக்கொள்கிறாய்

முன்னெப்போதும்
அறிமுகமில்லா வார்த்தைகளின்
குளிர்வை அனுபவிக்க
கொடுக்கிறாய்


அறையின் வெதுப்பில்
சிற்சில முரண்கள்
வெந்து தணிகின்றன

இடமாற்றம் செய்யப்படும்
காதல்கள் ஒலிகளின்
மயக்கத்திற்காய் காத்திருக்கையில்

விலகிவிடுதலுக்கான
பிரயத்தனங்களாய்
மௌனங்களை
மென்று கொண்டிருக்கிறேன்

என்றோ எப்பொழுதோ
நடந்த பாதையின்
நீட்டலில் நடந்து செல்ல.

No comments:

Post a Comment