Pages

Tuesday 5 June 2012


குறி இதழில் வெளியான இரு கவிதைகள்:-

சொல்லத்துணியாத
வார்த்தைகளின் சேகரிப்புக்கள்
மௌனங்களாக உன்னிடம்
வந்து சேர்ந்தும்
ஒலிகளின் மயக்கத்திற்காய்
காத்திருக்கிறாய்.

வார்த்தைகள்
சில நேரங்களில்
மௌனங்களில்
அடைப்பட்டு விடுகிறது

சில நேரங்களில்
உச்சரிக்கப்பட்டு
உதாசீனப்படுத்தப்படுகிறது

சொல்ல வேண்டிய
தருணங்களை கடந்து
வெறுமையை நிறைத்து
கொள்கின்றன சில நேரங்களில்..


ஒருசொல்
போதுமானதாயில்லை
எப்பொழுதும்
இருந்தும் வார்த்தையில்
தொங்கிகொண்டிருப்பதிலேயே
கழிந்து விடுகிறது வாழ்க்கை.

No comments:

Post a Comment