Pages

Monday 28 May 2012




"
போலி கௌரவம் குறித்து சீனிவாசன் இருமுனைத்தாக்குதல்களுக்கும் சளைக்காமல் பதிலளித்த போதும், அவரை உங்களுக்கென நான் ஒரு வெளி தருகிறேன், உங்கள் முகமூடியிலிருந்து வெளிவாருங்கள் என தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்த கோபி நாத்தின் மற்றொரு முகம் ஆச்சர்யத்தையே தந்தது.. சீனிவாசனை நமக்கு பிடிக்காமல் போனால் அவரின் படங்களை பார்ப்பதை தவிர்க்கபோகிறோம், நமக்கு அதனால் எந்த வித லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை.. 

விஜயின் ஆரம்ப கால படங்கள் உண்மையில் எத்தனை பேருக்கு பிடித்து இருக்கும்? இன்று அவருக்கு இருக்கும் ஒரு இமேஜ் போலியான கௌரவம் தானே.. அவருக்கு மட்டுமல்ல அரசியல் வாதிகளிலிருந்து , பணம் இருக்கும் அனைவரும் போலி கௌரவத்தின் அடையாளத்தில் தான் வாழ்கிறார்கள்.. 

கோபிநாத்தே சீனிவாசனுக்கு இன்னொரு முகமூடி தர அத்தனை பிரயத்தனப்பட்டது நன்றாகவே இல்லை. மேலும் ஒரு தனிப்பட்ட மனிதரை அத்தனை பேர் முன்னிலையிலும் இத்தனை கேள்விகளை கேட்டதும், அதற்கு பொருத்தமான ஏளன சிரிப்புக்களை சரியாக எடிட் செய்து அந்த இடத்தில் காட்டியதும் அந்த நிகழ்ச்சி மீதான் மரியாதையை குறைத்தது.

பிரபலமாக ஒருத்தர் தன் காசை செலவழித்து சிலருக்கு நன்மை செய்கிறார், அதில் அவருக்குத்தான் லாபமும், நட்டமும் ஏற்பட போகுதே தவிர நமக்கு அவரை கிண்டல் செய்து பொழுது போக்குவது மட்டும் தான் மிச்சம்.

எல்லாருமே குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்ற வார்த்தையை வாழ் நாளில் ஒரு முறையாவது சொல்லியிருப்போம். ஆனால் அப்பொழுது எல்லாரையும் போலி கௌரவத்திற்காக தான் நீங்கள் இந்த வார்த்தையை சொல்கிறீர்கள் என சொல்ல முடியுமா?? அதை வந்திருந்த எழுத்தாளரும் முழுமையாக ஆட்சேபித்தார்.

 இதையே கமல், ரஜினி, விஜய் நற்பணி மன்றங்கள் சேவை செய்கையிலோ இந்த நீயா நானாவில் ஒரு முறையாவது அதை எதிர்த்து இருக்கிறார்களா? சூர்யா ஒரு நடிகராக தன்னை முன்னிருத்தி ஆரம்பித்த அகரம் அறக்கட்டளைக்கு அவ்வளவு விளம்பரம் கொடுத்த விஜய் தொலைக்காட்சி, நீங்கள் சாதாரண மனிதராக இருந்து தான் இச்செயலை செய்ய வேண்டும், ஒரு நடிகராக போலி கௌரவத்திற்காக இதை செய்ய கூடாது என சொல்லவில்லையே.. தான் பிரபலமாகிய பின் சேவைகள் செய்தால் அது உடனே மக்களுக்கு சென்று சேரும் என சீனிவாசன் சொல்லியிருக்கிறார், அவருக்கு சந்தர்ப்பம் தான் தந்து பார்க்கலாமே.. அப்படி செய்ய வில்லையெனில் பின் இவர்கள் கேள்வி கேட்கட்டும், ஒரு தனி மனிதன் ஒரு அடியை முன் வைக்கும் முன்னே அவரை இப்படி அசிங்கப்படுத்தியது ஊருக்கு இளைத்தவனை கோமாளியாக்கி பார்த்த கதையாகத்தான் தோன்றியது.."

No comments:

Post a Comment