Pages

Wednesday 4 January 2012

பாரதியின் சொல்


ரௌத்ரம் பழகு

கோபம் ஒரு மோசமான விருந்தினர் ,ஆனால் அந்த விருந்தினரிடம் பழக சொல்லி ஒரு மாபெரும் கவி சொல்கிறாரென்றால் அதன் அர்த்தம் என்னவாயிருக்கும்...


ரௌத்ரம் பழகு என்பதனை மேலோட்டமாக பார்த்தால் கோபம் கொள்ளசொல்கிறார் என்று நினைப்போம், ஆனால் களவும் கற்று(கத்தும்) மற என்று சொல்வது போல் ரௌத்ரம் பழகிகொள் , தெரிந்து கொள் என்று தான் இங்கு பாரதி சொல்கிறார்..


பயனற்ற , இடம், பொருள் தெரியாமல் வெளிபடுத்தப்படும் கோபம் பயனற்று தான் போகும் , ஆனால் அதனை "அக்னி குஞ்சொன்று கண்டேன், அதனை அங்கே ஒரு பொந்திடை வைத்தேன் என்று தான் சொன்னது போல் ரௌத்ரம் அறிந்து உன் மனதில் வைத்து ஆக்கபூர்வமாக மாற்றி தேவையான நேரத்தில் வெளிபடுத்து என்பது தான் கவிஞனின் எண்ணம் ...


கண்ணம்மாவை (கண்ணனை ) உருகி உருகி பாடிய பாரதி சோம்பி திரியும் மனிதரையும், அடிமை சங்கிலியில் நம்மை பிணைத்து வைத்திருந்த வெள்ளையரையும் கேள்வி கேட்கும்போது தன் ரௌத்ரத்தை தன் கவிதையில் கொண்டு வந்திருந்ததை நாம் அறிவோம்...


தேவையான நேரத்தில் வெளிபடுத்தப்பட்ட ரௌத்ரம் தீப்பொறியாய் எரிந்து இந்தியர் அனைவரின் நெஞ்சுக்குள்ளும் வேள்வி தீயாய் கனன்றது... அந்த தீயின் வேகம் தாளாமல் வெந்து (வெள்ளையரின் ஆதிக்கம்) , தணிந்தது (விடுதலை).


ரௌத்ரம் பழகி கொள்வோம் நாமும் பெருங்கவியின் வார்த்தை படி ...

No comments:

Post a Comment