"முகமூடியணிந்து இடும்
|
Pages
Saturday, 15 September 2012
முதல் துளி வீழ்ந்த கணம்
மண்வாசனையை பற்றிவந்ததாய் ஞாபகம்
விலக்கப்படாத ஒரு நினைவு
உள்ளுக்கும் வெளிக்குமாய்
கடந்து செல்கின்றது.
இழுத்துப்பிடித்த சுவாசங்களும்
உடல் நிறைத்த மழைத்துளிகளுமாய்
நீட்டித்துக்கொண்டிருக்கிறேன் உனக்கான
மண்வாசனையை பற்றிவந்ததாய் ஞாபகம்
விலக்கப்படாத ஒரு நினைவு
உள்ளுக்கும் வெளிக்குமாய்
கடந்து செல்கின்றது.
இழுத்துப்பிடித்த சுவாசங்களும்
உடல் நிறைத்த மழைத்துளிகளுமாய்
நீட்டித்துக்கொண்டிருக்கிறேன் உனக்கான
என் வாழ்வை.
இருந்தும்
தொடுதலற்ற உன்னுடனான பொழுதுகள்
ஏகாந்தத்தை நீட்டித்தது போல் இந்த
மழை இல்லவே இல்லை.
இருந்தும்
தொடுதலற்ற உன்னுடனான பொழுதுகள்
ஏகாந்தத்தை நீட்டித்தது போல் இந்த
மழை இல்லவே இல்லை.
Saturday, 8 September 2012
இரவல் ஒளியில் தனித்திருந்த நிலவின்
கண்ணீர் போல் ஒற்றைத்துளிகளாய்
கரங்களில் இறங்கியது அந்த மழை.
முன்னெப்போதோ நுகர்ந்திருந்த மண்வாசனையும்
மகரந்தத்தின் ரகசிய மொழிகளை
களவாடி களித்திருந்த வண்டின் ஓசையும்
சேர்ந்து வந்ததைப்போன்ற ஒரு பிரமையும்
அக்கணத்தில் தோன்றி முகிழ்த்தலானது.
எங்கும் ருசித்திராத , ருசியே இல்லாத ஒரு
ருசியாய் இந்த மழை இன்றும் நாவில்
உருண்டோடியிறங்கியது .
மென் மழைத்துளிகளாய் இறங்கிக்கொண்டிருந்து
பெரும் மழையாய் வீழத்தொடங்கிய அக்கணம்
அற்றை நாளின் வெப்பத்துணுக்குகள்
மெல்ல மழையின் சரீரத்திற்கு இரையாகத்தொடங்கின.
தழலென்றிருந்த தேகம் தணிந்து தளரத்தொடங்க
என்னிருப்புக்கள கரையத்தொடங்கின
முழுதுமாய் மழைத்துளிகளாய் நிலத்தில்
வீழ்ந்து தெறித்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்
சிதறல் துளிகளாலான என்னை நானே
ஒன்று சேர்க்க முயன்று தோல்வியுறுகிறேன்
உணர்வுகள் முகிழ்க்கும் ஏகாந்தத்தின் முன்
போதித்தத்துவம் பெற்று மகிழ்கிறேன்.
எப்பொழுதும் கிடைத்துவிடாத இந்த மகிழ்வின்
கணம் என்றாவது சிறகுடைந்த பறவையாய்
மழைக்கு முன்னான கணத்தினை
நோக்கி என்னை செலுத்திவிடக்கூடும்.
அப்பொழுதும் இந்த மழை வலுவிழந்து
காய்ந்து போகாதிருக்கட்டும்.
களவாடி களித்திருந்த வண்டின் ஓசையும்
சேர்ந்து வந்ததைப்போன்ற ஒரு பிரமையும்
அக்கணத்தில் தோன்றி முகிழ்த்தலானது.
எங்கும் ருசித்திராத , ருசியே இல்லாத ஒரு
ருசியாய் இந்த மழை இன்றும் நாவில்
உருண்டோடியிறங்கியது .
மென் மழைத்துளிகளாய் இறங்கிக்கொண்டிருந்து
பெரும் மழையாய் வீழத்தொடங்கிய அக்கணம்
அற்றை நாளின் வெப்பத்துணுக்குகள்
மெல்ல மழையின் சரீரத்திற்கு இரையாகத்தொடங்கின.
தழலென்றிருந்த தேகம் தணிந்து தளரத்தொடங்க
என்னிருப்புக்கள கரையத்தொடங்கின
முழுதுமாய் மழைத்துளிகளாய் நிலத்தில்
வீழ்ந்து தெறித்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்
சிதறல் துளிகளாலான என்னை நானே
ஒன்று சேர்க்க முயன்று தோல்வியுறுகிறேன்
உணர்வுகள் முகிழ்க்கும் ஏகாந்தத்தின் முன்
போதித்தத்துவம் பெற்று மகிழ்கிறேன்.
எப்பொழுதும் கிடைத்துவிடாத இந்த மகிழ்வின்
கணம் என்றாவது சிறகுடைந்த பறவையாய்
மழைக்கு முன்னான கணத்தினை
நோக்கி என்னை செலுத்திவிடக்கூடும்.
அப்பொழுதும் இந்த மழை வலுவிழந்து
காய்ந்து போகாதிருக்கட்டும்.
உனக்கென்று ஒரு கணம்
ஒரு கணத்தின் மகத்தான
வரத்தினை உனக்கு
அளித்திடக் காத்திருக்கிறேன்
வரத்தினை உனக்கு
அளித்திடக் காத்திருக்கிறேன்
நெடு நாளாய் நீ காத்திருந்த
நொடி இதுவாகத்தான் இருக்க கூடுமென
தெரிந்திருந்தும் பொத்தி வைத்திருந்ததற்காய்
நீ கோபித்து கொள்ளவும் கூடும்
நொடி இதுவாகத்தான் இருக்க கூடுமென
தெரிந்திருந்தும் பொத்தி வைத்திருந்ததற்காய்
நீ கோபித்து கொள்ளவும் கூடும்
இக்கணத்தினை உனக்கு பரிசாய்
அளித்திட்டால் பல கணங்களாய்
அமிழ்த்தியிருந்த உன் வேட்கைகள்
ஒருசேர என்னை தாக்கவும் கூடும்
அளித்திட்டால் பல கணங்களாய்
அமிழ்த்தியிருந்த உன் வேட்கைகள்
ஒருசேர என்னை தாக்கவும் கூடும்
தொடர் தகிப்புக்களை
என்னால் தாங்கவியலாது என
மிக மென்மையான காதல்களை
எனக்கு நீ பரிசளிக்கவும் கூடும்
என்னால் தாங்கவியலாது என
மிக மென்மையான காதல்களை
எனக்கு நீ பரிசளிக்கவும் கூடும்
விருப்பு வெறுப்பற்ற
தோழனாயும் நீ என் எதிர்ப்பார்ப்புக்களை
கேலிப்பேசி விடவும் கூடும்
தோழனாயும் நீ என் எதிர்ப்பார்ப்புக்களை
கேலிப்பேசி விடவும் கூடும்
கருணையற்ற மழையைப்போல்
நீ ஒரேயடியாய் என்னை
முகிழ்த்துவிடவும் கூடும்
நீ ஒரேயடியாய் என்னை
முகிழ்த்துவிடவும் கூடும்
இவையெல்லாவற்றையும்
நான் தாங்கிவிடவும் கூடும்
இல்லையென்றால்
உன்னிடமிருந்து கூட எனக்கான
அழைப்பு வரக் கூடும்
நான் தாங்கிவிடவும் கூடும்
இல்லையென்றால்
உன்னிடமிருந்து கூட எனக்கான
அழைப்பு வரக் கூடும்
காலம் மட்டுமே அறிந்த நிகழ்வுக்காய்
உன் திசை நோக்கி நகர்த்துகிறேன்
என் மொத்த பிரியத்தையும்.
உன் திசை நோக்கி நகர்த்துகிறேன்
என் மொத்த பிரியத்தையும்.
அதீதத்தில் வெளியான கவிதை..
Saturday, 25 August 2012
விளக்கம் சொல்லவியலா
தருணங்கள் கோபங்களாகவோ
எரிச்சல்களாகவோ
வெளிப்பட்டு விடுகின்றன..
அர்த்தமில்லா வசவுகளோ
வலிக்க கூடிய அடிகளோ
எப்பொழுதும்
உன்னால் மறந்து விடப்படுகின்றன
நினைத்துப்பார்க்கையில்
ஒவ்வொன்றும்
பிடுங்கவியலா ஆணிகளாக என்
மனதின் ஆழத்தில்.
கன்னமிழைத்து சிரிப்பதிலோ
மடியில் வந்து விழுகையிலோ
கள்ளமில்லாமல் சிந்திவிடுகிறாய்
உன் பாசங்களை.
வெறுமை பூசிய
முத்தத்துடன்,அழுகை
வெளிப்படுத்தும் சிரிப்புமாக
உலவிக்கொண்டிருக்கிறேன் நான்.
முதிர்ந்து விட்ட தாயாக நீயும்
அடைப்புக்குறிக்குள் அடங்கிவிட்ட
சேயாக எப்பொழுதுமே நான்.
தருணங்கள் கோபங்களாகவோ
எரிச்சல்களாகவோ
வெளிப்பட்டு விடுகின்றன..
அர்த்தமில்லா வசவுகளோ
வலிக்க கூடிய அடிகளோ
எப்பொழுதும்
உன்னால் மறந்து விடப்படுகின்றன
நினைத்துப்பார்க்கையில்
ஒவ்வொன்றும்
பிடுங்கவியலா ஆணிகளாக என்
மனதின் ஆழத்தில்.
கன்னமிழைத்து சிரிப்பதிலோ
மடியில் வந்து விழுகையிலோ
கள்ளமில்லாமல் சிந்திவிடுகிறாய்
உன் பாசங்களை.
வெறுமை பூசிய
முத்தத்துடன்,அழுகை
வெளிப்படுத்தும் சிரிப்புமாக
உலவிக்கொண்டிருக்கிறேன் நான்.
முதிர்ந்து விட்ட தாயாக நீயும்
அடைப்புக்குறிக்குள் அடங்கிவிட்ட
சேயாக எப்பொழுதுமே நான்.
நற்றிணையில் வெளியான கவிதை..
Tuesday, 24 July 2012
யாருமேயில்லாத இரவுக்குள்
பெரும்பாலும் என்னைத்தொலைத்து
விடுவதே வாடிக்கையாயிற்று என் கனவுகளுக்கு.
மீசையை நீட்டிக்கொண்டு
நாவால் உதடுவருடிக்கொண்டிருக்கும் பூனையோ
கிளைமீது தனித்திருந்து நதி நீரில்
நெளிந்து செல்லும் மீனைக்கவ்விப்பறக்கும்
மீன்கொத்தியோ,
நெடுமலையின் உச்சியிலிருந்து
தலைக்கீழாய் விழுந்துவிடவோ,
இருட்டறையில் பாம்படம்
அணிந்த பாட்டிகளின் அருகில்
மணப்பெண்ணாகவோ,
அறைமுழுதும் சிதறிக்கிடக்கும்
சந்தனத்திலும், பூக்களிலும்
பிரண்டுசெல்வதாகவோ,
இறந்துப்போன அம்மாவின்
சேலைப்பற்றி கதைசொல்வதாகவோ
பழுத்தோலைகளின் நடுவே மணல்கீறும்
சிறுமியாகவோ
ஒரு கனவும் வருவதேயில்லை
கனவுகளில் தொலைபவருக்கு
கனவுகள் வராமல்தான் இருக்குமோ.
Subscribe to:
Posts (Atom)
